பண்டரிபுரம், உடுப்பி, திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆகிய நான்கும் திருமாலின் புகழ்பெற்ற தலங்களாக விளங்குகின்றன. உடுப்பியில் அவர் அன்னபிரம்மா. அங்கு எந்நேரமும் அன்னம் வயிறார கிடைக்கும். பண்டரிபுரத்தில் பகவான் நாத பிரம்மா. அங்கு எப்போதும் பஜனை கேட்டுக்கொண்டேயிருக்கும். திருப்பதியில் பெருமாள் காஞ்சன பிரம்மா. காணிக்கையாக தினமும் பணம் கொட்டிக்கொண்டேயிருக்கும். திருவரங்கத்தில் அரங்கன் ஜன பிரம்மா. அங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.