பதிவு செய்த நாள்
26
அக்
2017
05:10
மகிஷாசுரமர்த்தினி குறித்து தேவி மகாத்மியம், தேவி பாகவத புராணம், சிவபுராணம், ஸ்கந்த புராணம், வாமன புராணம் ஆகிய புராணங்கள் விரிவாக விளக்குகின்றன. இவள் பலவிதமான திருக்கோலங்களில் 2, 4, 6, 8, 10, 12, 16, 18, 20, 32 என்ற எண்ணிக்கையில் கைகள் பெற்றுத் திகழ்கிறாள் என்பது குறித்தான விளக்கங்கள் உண்டு. மகாபலிபுரத்தில் 2 கைகளோடும்; எல்லோராவில் 4 கைகளோடும்; தாராசுரம், திருபுவனம், கங்கை கொண்ட சோழபுரத்தில் 6 கைகளோடும்; மைசூர், மகாபலிபுரம், காஞ்சி கைலாசநாதர் கோயிலில் 8 கைகளோடும்; காசி, நேபாளத்தில் 10 கரங்கள் கொண்டவளாகவும், வடக்கே உதயகிரி தலத்தில் 12 கைகள் உடையவளாகவும்; திருவிடைமருதூர், காசி, நேபாளம் ஆகிய இடங்களில் 16 கைகள் உடையவளாகவும்; சிதம்பரம், நேபாளம், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் 18 கைகள் உடையவளாகவும், சிதம்பரம், நேபாளத்தில் 20 கைகளுடனும்; பாட்னா, சாரநாத், நாளந்தா, பஞ்சாப், ஹரியானா ஆகிய இடங்களில் 32 கரங்களுடனும் திருக்கோலம் கொண்டு அருளாட்சி புரிகிறாள்.