Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் திருத்தளிநாதர் ... சேகர் ரெட்டியின் மனைவி, மகளுக்காக காத்திருந்த கந்தசுவாமி திருக்கல்யாணம் சேகர் ரெட்டியின் மனைவி, மகளுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூரில் பூ புத்தரி திருவிழா : பழங்குடி மக்கள் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
கூடலூரில் பூ புத்தரி திருவிழா : பழங்குடி மக்கள் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

27 அக்
2017
12:10

கூடலுார்: கூடலுார் அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரிய, பூ புத்தரி நெற்கதிர் அறுவடை திருவிழா சிறப்பாக நடந்தது. நீலகிரி மாவட்டம், கூடலுார் புத்துார்வயல் பகுதியில், பனியர் இன பழங்குடி மக்கள், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், அறுவடை திருவிழா கொண்டாடு கின்றனர். இது, பூ புத்தரி என, அழைக்கப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, நம்பாலக்கோட்டை வேட்டைகொருமகன் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. திரளான பழங்குடி மக்கள் பங்கேற்று, புத்துார்வயல் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு, குல தெய்வத்துக்கு விளக்கு ஏற்றி, பூஜை செய்தனர். 10 நாட்கள் விரதமிருந்த ஆண்கள், நெற்கதிர்களை அறுவடை செய்து, அவற்றை மூன்று கட்டாக கட்டினர். பின், பகவதி அம்மன் மண்டபத்துக்கு நெற்கதிரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அங்கு, நெற்கதிருக்கு பூஜை செய்தனர்; தொடர்ந்து, பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடனம் நடந்தது. அப்பகுதியில் இருந்து, நெற்கதிர் கட்டு ஒன்றை, மங்குழி பகவதி அம்மன் கோவிலுக்கும், மற்றொன்றை, விஷ்ணு கோவிலுக்கும் எடுத்துச் சென்றனர். மூன்றாவது கட்டை, நம்பாலக்கோட்டை வேட்டைகொருமகன் கோவிலுக்கு, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். விழாவில் பங்கேற்ற சிலர் கூறுகையில், பல நுாற்றாண்டுகளாக, இவ்விழா கொண்டாடப்படுகிறது. நெற்கதிர் அறுவடை செய்து, பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவ்விழாவுக்கு பின், முதிர்ந்த நெல் அறுவடை செய்யப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar