Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோமதீஸ்வரர் அபிஷேகத்தை தரிசிக்க ... கொளஞ்சியப்பர் கோவிலில் ரூ.7.92 லட்சம் காணிக்கை கொளஞ்சியப்பர் கோவிலில் ரூ.7.92 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நஞ்சன்கூடு கோவிலில் சிறப்பு தரிசனத்தில் ரூ.3.15 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
நஞ்சன்கூடு கோவிலில் சிறப்பு தரிசனத்தில் ரூ.3.15 லட்சம் வசூல்

பதிவு செய்த நாள்

15 நவ
2017
04:11

மைசூரு: கன்னட கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையான நேற்று முன்தினம், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில் சிறப்பு தரிசனத்தில், 30 ரூபாய் டிக்கெட் மூலம், 1.20 லட்சம் ரூபாயும், 100 ரூபாய் டிக்கெட் மூலம், 1.95 லட்சம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. கன்னட கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையன்று, நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில், மாநிலத்தின் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை, 4:00 மணியிலிருந்து நஞ்சன்கூடு வந்த பக்தர்கள், கபிலா நதியில் புனித நீராடிவிட்டு, நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசித்தனர். அர்ச்சகர் நாகசந்திர தீட்ஷிதர் தலைமையில், ஸ்ரீகண்டேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம், வில்வ அர்ச்சனை, பஞ்சாமிர்த அபிஷேகம், ருத்ராபிஷேகம் நடந்தது. பக்தர்கள், கோவில் வெளி வளாகத்தில், முடி காணிக்கை, அங்கபிரதட்சனம், துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் விளக்கேற்றி வழிபட்டனர். கோவிலில் சிறப்பு தரிசனத்தில், 30 ரூபாய் டிக்கெட் மூலம், 1.20 லட்சம் ரூபாயும், 100 ரூபாய் டிக்கெட் மூலம், 1.95 லட்சம் ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. ஸ்ரீகண்டேஸ்வர கோவில் வளாகத்திலுள்ள உணவு கூடத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலின் வெளிப்பகுதியில், பெங்களூரு, மைசூரு, சிக்கபல்லாபூரை சேர்ந்த பக்தர்கள், பிரசாதம் வினியோகித்தனர். கண்டேஸ்வரர் சுவாமியின் முத்து பல்லக்கு உற்சவம், கோவிலின் வெளிப்பகுதியில், வாண வேடிக்கைகள் நடந்தன. நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதே போன்று, நஞ்சன்கூடு தாலுகா சிக்கயநனசத்ரா கிராமத்தில், பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரா கோவிலில், லிங்கபட்டரகுடி, காசி விஸ்வநாதர் கோவில், தேவிரம்மஹள்ளி சரண சங்கம்ம மடத்தின், 108 லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar