பதிவு செய்த நாள்
30
நவ
2017
12:11
சேலம்: சேலம், திருமணிமுத்தாற்றின் அணைமேடு கரையில் உள்ள, சவுராஷ்டிரா விப்ரகுல நந்தவனத்தில் புதிதாக லட்சுமி நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை மற்றும் சப்தகன்னியர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சேலம், அணைமேட்டில் சவுராஷ்டிரா சமூகத்துக்கு சொந்தமான நந்தவனத்தில் ரேணுகா தேவி, வன்னி விநாயகர் கோவில்கள் அமைக்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக பூஜைகள் செய்து வழிபாடு நடந்து வருகின்றன. வன்னி விநாயகர், நாகர் சிலை, துளசிமாடம் ஆகியவை உள்ள தரைப்பகுதி உடைந்து பள்ளமானது. இதையடுத்து, மூன்று அடி உயர மேடை அமைத்து, அதில் புதிதாக ஒருபுறம் லட்சுமி நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, மறுபுறம் விஷ்ணுதுர்க்கை அம்மன் சிலை, சப்த கன்னிமார்கள் சிலைகளுக்கு, சத்யாராம் பட்டாச்சாரியார் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.