பதிவு செய்த நாள்
30
நவ
2017
05:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் நடக்கும் தீப திருவிழாவில், குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் தீப திருவிழா எட்டாம் நாள் விழாவில், அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, காலை, 10:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்டு, மாட வீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, வெள்ளி கைலாச வாகனத்தில் பிச்சாண்டவர் மாட வீதியில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.