Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ... திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம் திருப்பரங்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை இடித்து அகற்றம்
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை இடித்து அகற்றம்

பதிவு செய்த நாள்

01 டிச
2017
10:12

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் கருவறை, பக்தர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையே, போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.

சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள், 2015ல் துவங்கின. 2016 செப்.,4ல், பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில், சேலத்தை சேர்ந்த சிலர், கருவறையை இடிக்க தடை கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கமிட்டி அமைத்து, நீதிபதி சத்யநாராயண உத்தரவு பிறப்பித்தார். அதன் பின், கருவறையை தவிர பிற கட்டடங்கள் இடிக்கப்பட்டன. உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன், கடந்த மாதம் கருவறையை இடிக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, கருவறையை இடிப்பதற்கான நடவடிக்கையை, கோவில் நிர்வாகம் மேற்கொள்ள துவங்கியது. கருவறை அகற்றும் பணிக்காக, பாதுகாப்பு வழங்க கோரி கடந்த, 28ல், போலீசுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. நேற்று அதிகாலை, கருவறையை இடிக்கும் பணிகள் துவங்க இருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், ரஜினிசெந்தில் தலைமையில், கருவறையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கோவிலை முற்றுகையிடவும், கோவிலுக்குள் புகுந்து, பணிகளை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கோவிலுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு பணிகள் துவங்கின. கருவறையில் இருந்த மூலவர் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பூசாரிகள், வெளியில் தூக்கி வர முயற்சித்தனர். நுழைவு வாயில் சிறியதாக இருந்ததோடு, சிலை அதிக எடை கொண்டதாக இருந்ததால், அவர்களால் தூக்க முடியவில்லை. பின்னர், சிலையை கயிறு கட்டி, வெளியே கொண்டு வந்து நெற்குவியலில் வைத்தனர். அதன்பின், கருவறை சுவர்கள், பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. பணிகள் நடந்து வந்த நிலையில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பெண் வக்கீல் பிரவீணா, 45, கருவறை அருகே வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர் சென்று விட்டார்.

இது குறித்து, கோவில் நிர்வாக அதிகாரி மாலா கூறியதாவது: திருப்பணிகள் தாமதத்துக்கு, கோவில் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை. கடந்த, 2015ல் பணிகள் துவக்கப்பட்டதுமே, இதற்கு தடை ஏற்படுத்த பலர் முயற்சித்து வந்தனர். திருப்பணிகளை கவனிக்க வேண்டிய நிர்வாகம், நீதிமன்றத்துக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தில், எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. போடப்பட்ட ஒரே வழக்கும், தள்ளுபடி ஆகி விட்டது. சிலர் வழக்கு இருப்பதாக, தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும், உண்மைக்கு மாறானது. பணிகள் துவக்கப்பட்ட காலத்தில், 2.60 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு செய்யப்பட்டது. தடையால், மூன்று கோடி ரூபாயாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பணியை, ஓராண்டுக்குள் நடத்தி, 2019 ஆடிப்பண்டிகையை கொண்டாடும் வகையில் கோவில் தயாராகும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar