Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆண்டு விழா ... திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: புருஷா முனி வாகனத்தில் சுவாமி உலா திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பெயரில் பட்டா பெற உத்தரவு: அறநிலையத்துறை கமிஷனர் அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2017
12:12

திருப்பூர்: கோவில்கள், மடங்களுக்கு சொந்தமான அசையா சொத்துக்களை, ஒரு மாதத்துக்குள், கோவில் பெயரில் பட்டா பெற வேண்டும்’ என, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறைக்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டடங்கள், வீட்டு மனைகள் உள்ளன. கோவில்களில் முறையாக பூஜைகள், விழாக்கள் நடத்த வழங்கப்பட்ட இந்நிலங்கள், முறையாக பராமரிக்காததால், முறைகேடாக பெயர் மாற்றம் செய்து விற்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவில் கூறியிருப்பதாவது:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களுக்கு, நிலங்கள், மனைகள் மற்றும் கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றின் உரிமையாளர் என்பதற்கு சான்றாக, வருவாய்த்துறை பட்டா, கோவில் பெயரில் இருக்க வேண்டும். பெரும்பாலான நிலங்களுக்கு, கோவில் பெயரில் பட்டா இல்லை என்று தெரிகிறது. இதை பயன்படுத்தி, பிற நபர்கள், தங்களது பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து, பட்டா பெற்றுள்ளனர். அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் பெயருக்கு உடனடியாக பட்டா பெற வேண்டும். 15 நாட்களுக்குள் இதற்கு விண்ணப்பித்து, ஒரு மாதத்துக்குள், கோவில் நிர்வாகிகள் பட்டா பெற வேண்டும். இதில் பிரச்னை இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலருக்கு, மேல்முறையீடு செய்ய வேண்டும். பட்டா பெற விண்ணப்பித்த விபரத்தை தெரிவிப்பதோடு, வருவாய்த்துறை அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar