Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை வருமானம் ரூ.77 கோடி கடந்த ... ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுற்றுலாத் துறை மூலம் ரூ.2.62 கோடி: சுருட்டப்பள்ளி கோவில் பணிகள் துவக்க விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 டிச
2011
11:12

ஊத்துக்கோட்டை : இந்திய சுற்றுலாத் துறை மூலம் சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டேஸ்வரர் கோவிலுக்கு இரண்டு கோடியே 62 லட்ச ரூபாய்க்கு நலப்பணிகள் துவக்க விழா நடந்தது. தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி கிராமம். ஆலகால விஷத்தை உண்டு சிவபெருமான் மயக்க நிலையில் அன்னை பார்வதி மடியில் தலை வைத்து உறங்கும் காட்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். பிரதோஷ விழா இங்கு பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு இந்திய சுற்றுலாத் துறை மூலம் இரண்டு கோடியே 62 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவில் சுற்றுச்சுவர், மேல்நிலை குடிநீர் தொட்டி, பக்தர்கள் தங்கும் விடுதி ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. இதில் சுற்றுலா தகவல் மையம் துவக்க விழா மற்றும் அன்னதான சத்திரம் ஆகியவை கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. கோவிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய வரும் முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில் சேர்மன் முனிசேகர் ரெட்டி தலைமை வகித்தார். செயல் அலுவலர் முனி கிருஷ்ணய்யா வரவேற்றார். சித்தூர் எம்.எல்.சி., ஜெயச்சந்திர நாயுடு, சத்தியவேடு எம்.எல்.ஏ., ஹேமலதா பணிகளை துவக்கி வைத்தனர். இதில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar