Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வனத்தில் இருப்பதால் தான் ... பந்தளம் கோவில் இன்று மீண்டும் திறப்பு பந்தளம் கோவில் இன்று மீண்டும் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு: ஹெலிகாப்டர் கண்காணிப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு: ஹெலிகாப்டர் கண்காணிப்பு

பதிவு செய்த நாள்

06 டிச
2017
10:12

சபரிமலை : டிசம்பர் 6 தினத்தையொட்டி, சபரிமலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காடுகளில் ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடைபெறுகிறது.  டிச., 6 தினத்தையொட்டி, சபரிமலையில் நேற்று மதியம் முதல், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அடையாள அட்டை இல்லாதோர், வெளியேற்றப்பட்டனர். சுற்றுப்புறங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மெட்டல் டிடெக்டர் வாசல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் இருமுடி கட்டு தவிர, இதர பைகள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படுகிறது. வெட்டுக்கத்தி, அரிவாள் போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை. கோவில் பகுதி முழுவதும், மத்திய அதிவிரைவு படை மற்றும் கேரள போலீசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. வி.ஐ.பி., தரிசனம் கிடையாது. கோவில் வளாகத்தில் உள்ள நெய் ஊற்றும் இடம், மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் நாளை மதியம் வரை அமலில் இருக்கும். சபரிமலை உட்பட, பத்தணந்திட்டை மாவட்ட காடுகள் முழுவதும், ஹெலிகாப்டரில் கண்காணிப்பு நடக்கிறது.

தென்னங்கன்று நடுவதற்கு பணம் வசூலிக்க தடை:
சபரிமலை சன்னிதானத்தில், தென்னங்கன்று நடுவதற்கு பணம் வசூலிக்க, நிர்வாக அதிகாரி தடைவிதித்துள்ளார். சபரிமலைக்கு, 18 ஆண்டுகள் சென்றவர், குரு சுவாமி என்று அழைக்கப்படுகிறார். 18 மலை நிறைவு பெறும் போது, அதன் அடையாளமாக, இருமுடி கட்டுடன், ஒரு தென்னங்கன்றும் கொண்டு செல்லும் பக்தர், அதை கோவிலின் பின்புறம், பஸ்மகுளம் அருகே நடவு செய்வார். இப்போது ஆயிரக்கணக்கான தென்னங்கன்றுகள் வருவதால், அவை டிராக்டரில் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதை பயன்படுத்தி, சிலர், தென்னங்கன்று நடவு செய்வதற்கு முன், பூஜை நடத்த வேண்டும் என கூறி, பணம் வசூல் செய்து வந்தனர். இதற்கு, 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, தேவசம் போர்டு நிர்வாக அதிகாரி, சந்திரசேகரன், தென்னங்கன்று நடவு பூஜைக்கு தடை விதித்தார். இதை கண்காணிக்கஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று மீண்டும் பக்தர் கூட்டம் அதிகரித்ததால், 5,000 பேருக்கு மட்டுமே ‘ஸ்பாட் ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து, ‘ஸ்பாட் புக்கிங்’ எண்ணிக்கையை அதிகரிக்க, ... மேலும்
 
temple news
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கம்பமெட்டு ... மேலும்
 
temple news
 சபரிமலை: பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை உள்ள கியூ காம்ப்ளக்ஸில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் முழுமையாக வராததால் காலை 6:00 மணிக்கு பின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar