பதிவு செய்த நாள்
07
டிச
2017
12:12
திண்டிவனம்: திண்டிவனத்தில் பாலசித்தரும் வீர சைவமும் தொடர் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதின திருமடம் மற்றும் திண்டிவனம் வட்ட தமிழ்ச்சங்கம் இணைந்து, பாலசித்தரும் வீர சைவமும் மற்றும் வீர சைவ சமய சமுதாய மேம்பாட்டு மாத இதழ் வெளியீட்டு விழா நடந்தது. திண்டிவனம் மணக்குள விநாயகர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், திண்டிவனம் தமிழ்ச்சங்க தலைவர் துரைராசமாணிக்கம் வரவேற்றார். மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், தலைமை தாங்கி, பாலசித்தர் வீரசைவ சமய-சமுதாய மேம்பாட்டு இதழை வெளியிட்டார்.
இதனை, திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பரணிதரன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி அருணாச்சலம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில், ’சமயமும், சமுதாயமும்‘ என்ற தலைப்பில் மேலச்சிவபுரி முனைவர் பழமுத்தப்பன், காரைக்குடி தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், பேராசிரியர் வேட்டவராயன், வழக்கறிஞர்கள் கிருபாகரன், ஹென்றி ஜோசப், கார்த்திக், வி.ஏ.ஓ.,பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, நுால் ஆசிரியர் நல்லாவூர் திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினார். கவிஞர் ஆதிசீனுவாசன் நன்றி கூறினார்.