சபரிமலையில் டிச.5 வரை ரூ. 83 கோடி ரூபாய் வரவு: கடந்த ஆண்டை விட ரூ.13 கோடி அதிகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2017 12:12
சபரிமலை: சபரிமலையில் டிச., 5 வரை வருமானம் 83 கோடி ரூபாயை தாண்டியது. இது கடந்த ஆண்டை விட 13 கோடி ரூபாய் அதிகமாகும். டிச., 5 வரையிலான காணிக்கை வருமானம் மற்றும் வழிபாடு வரவுகள் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்படுள்ளது.
இதன் படி மொத்த வருமானம் 83 கோடியை கடந்தது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 கோடி அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரவணை விற்பனை மூலம் அதிக பணம் வந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 20.48 கோடிக்கு மட்டுமே அரவணை விற்பனை ஆகியிருந்தது. இந்த ஆண்டு 36.20 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு காணிக்கையாக 22.80 கோடி ரூபாய் கிடைத்தது. இந்தாண்டு காணிக்கையாக ரூ.29.49 கோடி கிடைத்தது. அப்பம் விற்பனையில் கடந்த ஆண்டு 5.95 கோடி ரூபாய் கிடைத்தது. இந்தாண்டு 6.38 கோடி கிடைத்தது. எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் பக்தர்கள் கேட்கும் எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அரவணை கூடுதலாக விற்பனையாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.