பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
சபரிமலை: ஆன்லைன் வரிசை தொடர்பான விசாரணைக்கு புதிய ஹெல்ப் லைன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுக்களாக வரும் பக்தர்களுக்காக கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்காக கேரள போலீஸ் அறிமுகம் செய்த, ஆன்லைன் வரிசை, பதிவு செய்யும் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த சீசனில் ஜன.,18, 19 தேதிகளை தவிர, இதர எல்லா நாட்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. மகரவிளக்கையொட்டி ஜன., 12 முதல் 15 வரை ஆன்லைன் முன்பதிவு வழங்கப்படவில்லை.இது தொடர்பாக பக்தர்கள் விசாரணைக்கு 70258 00100 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வெளிமாநில பக்தர்கள் வசதிக்காக பம்பையில் இருந்து குமுளி, மதுரை, திருச்சி, பழனி, சென்னை, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.மேலும் குழுக்களாக பக்தர்கள் வந்தால் மொத்தமாக பணம் செலுத்தி பஸ்சில் பயணம் செய்ய முடியும். இதற்காக மேலும் 10 பஸ்கள் பம்பை டிப்போவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணம் செலுத்தினால் ஏசி பஸ்களும் பக்தர்களுக்கு காண்டிராக்ட் அடிப்படையில் கிடைக்கும்.