Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலையில் மீண்டும் கூட்டம்; 7 மணி ... நிலக்கலிலிருந்து பம்பைக்கு செல்ல ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு நிலக்கலிலிருந்து பம்பைக்கு செல்ல ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
பம்பையில் குவியும் ஆடைகள்: பக்தர்களுக்கு வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பம்பையில் குவியும் ஆடைகள்: பக்தர்களுக்கு வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

26 நவ
2025
03:11

சபரிமலை: என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பம்பையில் ஆடைகளை விட்டுச்செல்லும் கலாசாரம் மாறவில்லை. தினமும் டன் கணக்கில் துணிகள் குவிகிறது.


பம்பையில் குளிக்கின்ற பக்தர்கள் தாங்கள் அணிந்துள்ள ஆடைகளை கழட்டி ஆற்றிலேயே விட்டு செல்கின்றனர். இது தவறான ஐதீகம் என்று சபரிமலை தந்திரியும் திருவிதாங்கூர் தேவசம்போர்டும் பலமுறை அறிவித்தும் பக்தர்கள் கேட்பதில்லை. அரசு சார்பில் இங்கு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டும் பக்தர்கள் ஆடைகளை விடுவதை விட்டபாடில்லை. இந்த சீசனிலும் டன் கணக்கில் ஆடைகள் குவிகிறது. இதை அப்புறப்படுத்துவது சவாலாக விளங்குகிறது. துணிகளை அகற்றும் குத்தகையை எடுக்க எவரும் முன்வராத நிலையில் தமிழகத்தை சேர்ந்த சுக்கூர் பாண்டியன் என்பவர் 2.8 லட்சம் ரூபாய்க்கு குத்தகை எடுத்துள்ளார். அவர் கூறும்போது, தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் துணியை தண்ணீரில் மூழ்கி எடுக்க வேண்டும், அவர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுக்க வேண்டும், தங்குமிடம் உணவு வழங்க வேண்டும். தேவசம் போர்டுக்கும் பணம் செலுத்த வேண்டும். லாபம் கிடைக்காது என்பதால் தான் பலரும் மறுக்கின்றனர், என்றார். துணிகளை அகற்றாத பட்சத்தில் தண்ணீர் துர்நாற்றம் வீசும். பக்தர்கள் தங்கள் துணிகளை பம்பையில் வீசக்கூடாது என தேவசம்போர்டு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar