பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
நகரி:காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலில், 15 நாட்களில், 58.86 லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்துள்ளது. சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் பிரசித்தி பெற்ற, வாயுலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, ரொக்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அவ்வகையில், கடந்த, 15 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, கோவில் அதிகாரி, பிரம்மராம்பா முன்னிலையில், ஊழியர்கள் எண்ணினர். இதில், 58 லட்சத்து, 86 ஆயிரத்து, 208 ரூபாய் ரொக்கமும், 203 கிலோ வெள்ளியும், 241 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.