பதிவு செய்த நாள்
11
டிச
2017
12:12
சேலம்: சுகவனேஸ்வரர், கோட்டை பெருமாள் கோவில்களின், புதிய தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி முடிந்தது. அதற்கான வெள்ளோட்டம், மார்ச்சில் நடக்க வாய்ப்புள்ளது. சேலம், சுகவனேஸ்வரர், கோட்டை பெருமாள் கோவில்களுக்கான புதிய மரத்தேர் தயாரிப்பு பணி, சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்து வருகிறது. இரு தேர்களின் பணி, 80 சதவீதம் முடிந்த நிலையில், நேற்று, அதில் சக்கரம் பொருத்தும் பணி, பொக்லைன் உதவியுடன் நடந்தது. தேரின் மேற்பகுதிக்கான மர வேலை, ஜனவரிக்குள் முடிக்கப்படும் நிலையில், மார்ச்சில் வெள்ளோட்டம் நடத்த வாய்ப்புள்ளது. 2018 வைகாசி விசாகத்தில், புதிய தேரில் தேரோட்டம் நடக்கும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஜனவரியில் மாற்றம்: கடைவீதி, தேரடியில் இருந்து, பழைய தேர்கள், இன்னும் அகற்றப்படவில்லை. அவற்றை, சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் நிறுத்த, கண்ணாடி கூண்டு தயாராக உள்ளது. இதனால், ஜனவரி மூன்றாவது வாரம், பழைய தேர், சுகவனேஸ்வரர் கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.