Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி அமாவாசை ராமேஸ்வரத்தில் ... திட்டக்குடி பக்த ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி திட்டக்குடி பக்த ஆஞ்சனேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனந்தமங்கலத்தில் அனுமன் அவதார திருநாள் விழா
எழுத்தின் அளவு:
அனந்தமங்கலத்தில் அனுமன் அவதார திருநாள் விழா

பதிவு செய்த நாள்

18 டிச
2017
04:12

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சுவாமி தனிச் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

ராவணன் வதத்திற்கு பிறகு கடலுக்கடியில் தவமிருந்த ரத்த பிந்து, ரத்த ராட்சசனை திருமாளின் சக்கரம், இந்திரன் உள்ளிட்டோரின் ஆயுதங்கள் மற்றும் சிவபெருமான் வழங்கிய நெற்றிக்கண்ணுடன் சென்று அழித்துவிட்டு ஆஞ்சநேய சுவாமி ஆனந்தமயமாக எழுந்தருளியதால் இ த்தலம் ஆனந்தமங்கலம் என பெயர் பெற்றது. அதுவே தற்போது அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேயர் 10 கரங்களுடன், பத்துவித ஆயுதங்கள், நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறார். அனுமன் தலமான இங்கு அனுமன் ஜெயந்தி, அமாவாசை விஷேச நாட்களாக உள்ளது. திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை சரணாகதியடைந்தால் புத்திகூர்மை,  தேக வலிமை உள்ளிட்ட சகல நன்மைகள் கிடைப்பதுடன்,ஆஞ்சநேய சுவாமியின் வாலில் நவகிரகங்கள் இருப்பதால் அவரை வழிபடுபவர்களுக்கு கிரக பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் அவதரித்த, மார்கழி மாத மூல நட்சத்திர திருநாளான நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருளசெய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொ டர்ந்து ஆஞ்சநேய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரி சனம் செய்தனர். பூஜைகளை மாதவன் பட்டாச்சாரியார் தலைமையிலானோர் செய்துவைத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar