பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
கோவை: அனுமன் ஜெயந்தியையொட்டி கோவையிலுள்ள அனுமன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன், ஆஞ்சநேயன், மாருதி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் அனுமனுக்கு, நேற்று அனைத்து கோவில்களிலும் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அனுமன் கோவில்களில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள், வெண்ணைகாப்பு, வடைமாலை, வெற்றிலை மாலை, செந்துாரகாப்பு, தங்கக்காப்பு, வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன.
பீளமேட்டிலுள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில், விஸ்வரூப ராஜ மாருதி அலங்காரத்திலும்,பேரூர் படித்துறையிலுள்ள அனுமந்தராய சுவாமி கோவிலில், செந்துாரகாப்பு அலங்காரத்திலும், துடியலுார் ஜெங்கமநாயக்கன்பாளையத்திலுள்ள நவாம்ஸ ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் ராஜமாருதி அலங்காரத்திலும், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவிலில் வெண்ணை காப்பு அலங்காரத்திலும், பக்தர்களுக்கு காட்சியருளினார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.