தேவாரம்: தேவாரத்தில் நடந்த ஐயப்பன் கோயில் சக்தி மற்றும் யாழி பூஜையில் ஏராள மானோர் பூக்குழி இறங்கினர்.
61வது சக்தி, யாழி பூஜையையொட்டி மணி மண்டபத்திலிருந்து உற்சவர் ஊர்வலமாக அழை த்து வரப்பட்டு ரங்கநாதர் கோயில் அருகே அமைக்கப்பட்ட ஆசிரமத்தில் எழுந்தருளினார்.
தேவாரம் ஜமின்தார் சிவராஜபாண்டியன் தலைமை வகித்தார். வர்த்தக பிரமுகர்கள் அய்யப்ப சாமி, மனோகரன், கதிரேசன் முன்னிலை வகித்தனர். மாலையில் வன்புலி வாகனன் ஆசிரமத் திற்கு அழைத்து வரப்பட்டார். 7 கன்னிமார்கள் நெய் கொப்பரை ஏந்தி வந்து சிறப்பு பூஜை துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நான்கு ரத வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடந்தது. அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அன்னதானம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகத்திற்கு பின் சுவாமி மணி மண்டபம் திரும் பினார். ஏற்பாடுகளை குருநாதர் மணிகண்டன் தலைமையிலான ஐயப்பன் மணி மண்டப நிர்வாகிகள் செய்திருந்தனர்.