வேலூர்: நாராயணி பீடத்தில், விஷ்வ கல்யாண ஹோமம் நடந்தது. வேலூர் அடுத் திருமலைக் கோடி, ஓம் சக்தி நாராயணி பீடத்தில், சக்தி அம்மாவின், 42வது ஜெயந்தி விழா வரும் ஜனவரி, 3 ல் நடக்கிறது. இதையொட்டி விஷ்வ கல்யாண ஹோமம் நடந்தது. தொடர்ந்து, ஒரு லட்சம் மஞ்சள் கொண்டு நடத்தப்பட்ட மகா லட்சுமி யாகம், மகா பூர்ணாஹூதியில், சக்தி அம்மா பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.