பதிவு செய்த நாள்
01
ஜன
2018
03:01
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில் நேற்று முன்தினம், 6:00 மணிக்கு சனி மகா பிரதோஷபூஜை நடந்தது. முன்னதாக சிவபெருமானுக்கு பால், தயிர்,பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் தேவியருடன் எழுந்தருளிய காசிவிஸ்வநாதர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.