Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் கோவிலில் பக்தர்கள் ... பழநி ’ரோப் கார்’ நாளை நிறுத்தம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை புண்ணியம் பூங்காவனம் திட்டத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
02:01

சபரிமலை: சபரிமலையில் சுகாதாரத்தை பாதுகாக்க பக்தர்கள் ஒத்துழைப்புடன் கேரள போலீஸ் நடத்தி வரும் ’புண்ணியம் பூங்காவனம்’ திட்டத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோயிலில் மலைபோல் குவிந்து வந்த பாலிதீன் குப்பை, பாட்டில் குடிநீர் தடையால் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குவியும் குப்பையை அகற்ற 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பக்தர்ளையும் ஈடுபடுத்தினால்தான் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் புண்ணியம் பூங்காவனம் திட்டம்.தினமும் காலை ஒரு மணி நேரம் சபரிமலையில் பணிபுரியும் ஊழியர்களும், பக்தர்களும் துப்புரவு பணியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை. வணங்குகின்ற கைகளை விட, சேவை செய்யும் கைகளைதான் ஐயப்பன் விரும்புகிறார் என்று சன்னிதானத்தில் ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்யப்படுகிறது.தற்போதைய கேரள மத்திய மண்டல ஐஜி விஜயன், சபரிமலையில் போலீஸ் தனி அதிகாரியாக பணியாற்றிய போது இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டம் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, சபரிமலையில் இந்த பணியை பாராட்டி பேசினார். பக்தர்கள் அதிகமாக கூடும் புண்ணிய தலத்தில் குப்பைகளை எதிர் கொள்வது சவாலான விஷயம், அதை எதிர்கொண்டு சபரிமலை வெற்றி பெற்றுள்ளது. இந்த துப்புரவு வேள்வியில் பங்கு கொள்ளாமல் இருந்தால் சபரிமலை பயணம் முழுமை அடையாது என்ற எண்ணத்தை இந்த திட்டம் ஏற்படுத்தியுள்ளது. இறைவனை வணங்குவதில் துாய்மை வேண்டும் என்பதை பக்தர்கள் மத்தியில் இந்த திட்டம் உணர்த்தியுள்ளது.இவ்வாறு பிரதமர் பாராட்டியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar