பதிவு செய்த நாள்
05
மார்
2026
07:03
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல்
உற்சவத்தில், சண்முக சுப்ரமணியர் சுவாமி தெப்பத்தில் உலா வந்து
அருள்பாலித்தார்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம், கடந்த பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர்,
சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை
நடக்கிறது.
காலை பல்லக்கிலும், இரவு அலங்கரித்த வாகனங்களிலும்
சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று நகராட்சி
நிர்வாகம் சார்பில் அம்மன் குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது.
இதற்காக குளத்தின் கரைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், புஷ்ப பல்லக்கில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி வீதியுலா புறப்பட்டார். அதிகாலை 3:00 மணிக்கு, தெப்பத்தில் சுவாமிகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
தொடர்ந்து, தெப்பத்தில் உலா வந்து சுவாமி அருள்பாலித்தார். நகராட்சி
தலைவர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவர் ராணி தண்டபாணி, பொறியாளர்
செந்தில், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் பழனியம்மாள், மேலாளர்
பார்த்தசாரதி, கவுன்சிலர்கள் சிங்காரவேல், அருண், ஜெயலட்சுமி நம்பிராஜன்,
முத்துக்குமரன், தீபா மாரிமுத்து, உஷா பாலு, அன்சர்அலி, ஞானசேகரன், வசந்தி
புருேஷாத்தமன், ராஜாத்தி சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.