திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2018 02:01
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:00 மணியளவில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நடராஜர் வெள்ளி கவசத்தில் காட்சியளித்தார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பால், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற பல அபிேஷகங்கள் நடந்தது.