Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமானுஜர் கோவிலில் திருவாதிரை விழா கதர் வேட்டி,சேலை அணிந்து பொங்கலிட்ட வெளிநாட்டினர் கதர் வேட்டி,சேலை அணிந்து பொங்கலிட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரரின் பாதுகையை தலையில் சுமந்த கலெக்டர்
எழுத்தின் அளவு:
சங்கரரின் பாதுகையை தலையில் சுமந்த கலெக்டர்

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
12:01

மண்ட்லா: மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கண்ட்வா மாவட்டம், ஓம்காரேஷ்வரில், நர்மதை ஆற்றங்கரையில், ஆதி சங்கரருக்கு, 108 அடி உயர சிலை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கியது. மாநிலம் முழுவதும், ஆதி சங்கரர் சிலை வடிவமைப்பதற்கு தேவையான உலோகங்கள் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த யாத்திரை மூலம், இந்த பிரசாரத்தில் மக்கள் இணைக்கப்படுகின்றனர்.இந்த பிரசார யாத்திரையில், ஆதி சங்கரரின் பாதுகைகள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. சமீபத்தில், டிண்டோரி மாவட்டத்தில் இருந்து, மண்ட்லா மாவட்டத்திற்கு வந்த பாதுகை அடங்கிய பெட்டிக்கு, மண்ட்லா கலெக்டர், சூபியா பாரூக்கி, பூஜை செய்து வரவேற்றார். பின், பாதுகை உள்ள பெட்டியை, தன் தலையில் வைத்து, ஊர்வலமாக எடுத்து வந்தார்.பாதுகையை தலையில் எடுத்து வரும் கலெக்டரின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. கலெக்டரை, பொது மக்கள் பாராட்டிஉள்ளனர்.

கேரள மாநிலம், காலடியில் பிறந்த, ஆதி சங்கரர், ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று தான் என்ற அத்வைத தத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியவர். நாடு முழுவதும் அத்வைத தத்துவத்தை பரப்புவதற்காக, கர்நாடக மாநிலம், சிருங்கேரியில் சாரதா பீடம், குஜராத் மாநிலம், துவாரகையில், துவாரகா பீடம், உத்தரகண்ட் மாநிலத்தில், ஜோஷி மடம், ஒடிசா மாநிலம் புரியில், கோவர்த்தன பீடம் என, நான்கு திசைகளில் மடங்களை நிறுவினார். தமிழகத்தில், காஞ்சிபுரத்தில், சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar