Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதர் வேட்டி,சேலை அணிந்து பொங்கலிட்ட ... திருவண்ணாமலையில் ரமணரின் 138வது ஜெயந்தி விழா திருவண்ணாமலையில் ரமணரின் 138வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக்கூடு
எழுத்தின் அளவு:
காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக்கூடு

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
12:01

புதுக்கோட்டை: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து, மதுரை செல்லும் வழியில், உள்ள காட்டுபாவா பள்ளிவாசலில், கி.பி., 17ம் நுாற்றாண்டில், அரேபிய நாட்டைச் சேர்ந்த சையதுபக்ருதீன் அவ்லியா எனும் மகான், திருமயத்துக்கு அருகிலுள்ள காட்டில் தங்கியிருந்தார்.இவர் நாகூர் தர்காவில் அடக்கமாயிருக்கும் ஷாகுல்அமீது அவ்லியாவின் பேரன். அப்போது, காட்டு வழியே குழந்தைகளுடன் சென்ற பிராமணப் பெண்களை, 14 கள்வர்கள் வழிமறித்தனர்.அவர்களுடன் சண்டையிட்டு, பெண்களையும், குழந்தைகளையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அப்பகுதியில் சில காலம் வாழ்ந்த பாவா மரணமடைந்தார். பாவா அடக்கமான இடத்தில், அப்பகுதி மக்களால் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகளுக்கு ஆற்காடு நவாப் முகமது அலியும், அவரது பரம்பரையினரும் கொடையளித்தனர்.புதுகை தொண்டைமான் மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும், இந்த தர்காவுக்கு நிதியுதவி செய்தனர். 1696ல் கிழவன் சேதுபதி காலத்தில், இந்த தர்காவுக்கு கொடை வழங்கிய செய்தி, இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, திகழும் இப்பள்ளிவாசலில், ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.இதில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த சந்தனக்கூடு விழா, கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து, 15 நாட்கள் தினமும் சிறப்பு தொழுகை நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனக்கூடு ஊர்வலம், வாண வேடிக்கைகளுடன் நடந்தது. இதில், அனைத்து தரப்பு பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar