பதிவு செய்த நாள்
04
ஜன
2018
01:01
ஓமலூர்: ஓமலூர், பெரிய மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழியில், சூரிய பகவான், தன் ஒளிக்கதிர்கள் மூலம், அம்மனை வழிபடும் அரிய காட்சி நடைபெறும். அதன்படி, நேற்று காலை, 7:15 மணிக்கு, மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் சிலை மீது, செந்நிறத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்தன. ஐந்து நிமிடங்கள் மட்டும் நடந்த இக்காட்சியின்போது, சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ஐந்து நாட்கள், இந்நிகழ்வு நடக்கும்.