பதிவு செய்த நாள்
16
ஜன
2018
12:01
நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு ஒரு டன் எடையிலான பூக்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தினசரி அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. மாட்டு பொங்கலை முன்னிட்டு, நேற்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வடை மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் எண்ணெய், தயிர், சந்தனம், மஞ்சள், பால் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு, பட்டாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். மேலும், ஒரு டன் எடையளவில், பல்வேறு மலர்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.