பதிவு செய்த நாள்
22
ஜன
2018
02:01
மல்லசமுத்திரம்: வையப்பமலை, பாலசுப்ரமணியம் கோவிலில் வரும், 31 அன்று தைப்பூச சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில், பிரசித்திபெற்ற குன்றின்மீது, பாலசுப்ரமணியம் எனும் பெயரில், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும், 31 அன்று, தைப்பூச சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. அதையொட்டி, காலை, 6:30 மணிக்கு பால்குடம் எடுத்தல், 9:00 மணிக்குமேல் பல்வேறு அபி ?ஷகங்கள், மகா தீபாராதனை நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் முருகன் காட்சியளிப்பார். அன்று சந்திரகிரஹணம் என்பதால், மாலை, 4:00 மணிக்கு கோவில் நடைசாற்றப்படும்.