சமயபுரம் மாரியம்மன் தைத் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2018 04:01
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைத் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தை உற்சவம் கொடியேற்றத்தின் போது, அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 7:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. விழாவையொட்டி, பல்வேறு வாகனங்களில், அம்மன் திருவீதி உலா நடைபெறும். 30ல், தெப்ப உற்சவமும், 31ல், தீர்த்தவாரியும் நடக்கிறது. அன்று இரவு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறும்.