பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
திருவள்ளூர் : காரியசித்தி கணபதி, ஆனந்தவல்லி அம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில், நேற்று, ஆறாம் ஆண்டு அபிஷேகமும், அன்னப்பாவாடை பெருவிழாவும் நடந்தது. சோழவரம் அடுத்த, நத்தம் (இகணபாக்கம்) கிராமத்தில் அமைந்துள்ளது காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி அம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில், ஆறாம் ஆண்டு அபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி, வாலீஸ்வரர், வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியர்... பக்த ஆஞ்நேயர், சொர்ணகர்ஷன பைரவர், காலபைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஸ்தபன கலச மகாஅபிஷேகம் நடந்தது, பின், தீபாராதனை நடைபெற்றது.மாலை, ஆனந்தவல்லி அம்பிகைக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்விக்கப்பட்டு, அன்னப்பாவாடை என்ற மகா நைவேத்யம் நடந்தது. சர்க்கரை பொங்கலின் நடுவே நெய் விளக்கில் அருள் பாலித்த அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.