வேதங்களை, அசுரன் ஒருவன் திருடினான். பெருமாள் வேதங்களை மீட்டார். அசுரனிடம் இருந்த தோஷம் தீர, வேதங்கள் சிவனை வழிபட்டன. வேதங்களின் வேண்டுகோளை ஏற்ற சிவன், வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். வேதங்கள் வழிபட்ட இத்தலம் “திருவேதிகுடி” எனப்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபம் நீங்க இத்தலத்தில் வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு “வேதி” என்றும் பெயருண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் உண்டானது. கல்யாண கனவு நனவாக இங்கு வழிபடுகின்றனர். இங்கு அம்பிகை மங்கள வாழ்வு அருள்வதால் “மங்கையற்கரசி” எனப்படுகிறாள்.
மாங்கல்ய தோஷம் நீங்க அம்மனுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்துவழிபடுகின் றனர். தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் 11 கி.மீ., தூரத்தில் கண்டியூர். அங்கிருந்து 3 கி.மீ., தொடர்புக்கு: 93451 04187, 98429 78302