Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்ப சுவாமி கோவில் மஹா ... ஆதியோகி சிலைக்கு பக்தர்கள் வரவேற்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதுகாப்பு வளையத்தில் பழநி கிரிவீதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2018
04:01

பழநி, பழநி முருன்கோயில் கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும்விதமாகவும் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடான பழநி மலைக்கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக மலைக்கோயில் பாதவிநாயகர்கோயில், வடக்குகிரிவீதி, வின்ச், ரோப்கார் ஸ்டேஷன் உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கிரிவீதியின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்புகளால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கிரிவீதியில் பாதுகாப்பு: மதுரை மீனாட்சியம்மன்கோயில் சித்திரைவீதி போல, பழநிகிரி வீதியை சுத்தமானதாக பராமரித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் கொண்டுவரஇவ்வாண்டு பழநிகோயில் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி மலைக்கோயில் கிரிவீதியில் நுழைவுப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார், கோயில் செக்யூரிட்டிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்தொடர்ச்சியாக கிரிவீதிகள் முழுவதும் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்பணி நடக்கிறது. இதுகுறித்து இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தொடர்ந்து போலீசார், செக்யூரிட்டிகள் மூலம் கண்காணிக்கிறோம். விழாக்காலங்களில் கிரிவீதியில் தற்காலிமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இவ்வாண்டு கிரிவீதிகள் பக்தர்கள் தங்கும் கூடம் உள்ளிட்ட இடங்களில் நிரந்தரமாக கேமராக்கள் பொருத்துகிறோம். இதன்மூலம் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, அதிகாரிகள் அறையில் இருந்தே கூட்டநெரிசல் உள்ளிட்டவைகளை கண்டறிந்து சரிசெய்யப்படும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar