பதிவு செய்த நாள்
25
ஜன
2018
01:01
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவில் உண்டியல் நேற்று காலை திறக்கப்பட்டது. இதில், ரூ.34 லட்சத்து, 74 ஆயிரத்து, 854 ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில், மூன்று மாதங்களுக்கு பின், நேற்று காலை பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்ததை திறந்து எண்ணினர். அதில் நிரந்தர உண்டியல் ஏழில் மொத்தம், 34 லட்சத்து, 74 ஆயிரத்து, 854 ரூபாய் மற்றும் தங்கம், 180 கிராம், வெள்ளி, 1,220 கிராம் இருந்தது, திருப்பணி உண்டியல் திறக்கப்படவில்லை. பண்ணாரி கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், தக்கார் முருகையா, கோவில் செயல் அலுவலர் அருள்குமார், ஆய்வாளர் கமலா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் மாணவர்கள் எண்ணிக்கையில் உதவி புரிந்தனர்.