Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயமாநகரத்தில் நாளை 4 கோவில்களில் ... பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு அவசியம் பாதயாத்திரை பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச திருவிழா: கிராமங்களில் நிலாவுக்கு சோறு மாற்றி மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
தைப்பூச திருவிழா: கிராமங்களில் நிலாவுக்கு சோறு மாற்றி மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

27 ஜன
2018
01:01

திருப்பூர் : தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம் துவங்கியுள்ள நிலையில், கிராமங்களில், நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் பாரம்பரியமான நிகழ்வு கும்மியாட்டத்துடன் துவங்கி உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கிராமங்களில், நிலாவுக்கு சோறு மாற்றும் நிகழ்வை, பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். கிராமத்தில், பொதுவான இடத்தில், பெண்கள், சிறுவர், சிறுமியர் கூடி, நிலா வந்ததும் விழா துவங்குகிறது. பிள்ளையார் பிடித்து வைத்து, வீடுகளில் இருந்து எடுத்து வரும் உணவு பதார்த்தங்களை படைத்து, நிலாவை வழிபடுகின்றனர்.

அதன்பின், கும்மிபாடல்களை பாடி, கும்மியடித்து விளையாடுகின்றனர். நிறைவாக, அனைவரும் உணவை Oஉõப்பிடுவர். இந்த வழிபாட்டின் முதல் நாள், தைப்பூச தேரோட்டத்துக்கான கொடியேற்ற நாளில் இருந்து துவங்குகிறது. முதல் நாள், நிலா பிள்ளைக்கு, வாழைப்பழமும், நாட்டு சர்க்கரையு ம் படைக்கின்றனர். தேரோட்ட நாள் வரை, மற்ற நாட்களில் கலவை சாதங்களை படைக்கின்றனர். தேரோட்ட நாளில், இனிப்பு கச்சாயம், ஒப்புட்டு படைத்து, வழிபடுகின்றனர். நிலாவை பிள்ளையாக கருதி, கிராமப்புற பெண்களாக தாய்மார்கள், சோறு ஊட்டும் விழாவாக, நிலாவுக்கு சோறு மாற்றும் விழா நடக்கிறது. திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில், நேற்று முன்தினம், பாரம் பரியமான இவ்விழா துவங்கியுள்ளது. அவ்வகையில், மங்கலத்தை அடுத்துள்ள வேட்டுவபாளையத்தில், ஊர்பொதுமக்கள் சார்பில், நிலா பிள்ளைக்கு சோறு மாற்றுதல், நேற்று முன்தினம் துவங்கியது. மலைக்கோவில் குழந்தைவேலாயுதசாமி கோவில், தேரோட்டத்தை மையமாக வைத்து, இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. பெண்கள், தங்களது வீடுகளில் இருந்து உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து, நிலாவுக்கு படைத்தும், கும்மி பாட்டு பாடியும் வழிபட்டு வருகின்றனர். சிறுவர், சிறுமியரை வைத்து விழா நடத்துவதன் மூலமாக, கிராமப்புற மக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள், கும்மிபாடல் போன்றவை, அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கப்படுவதாக, பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar