பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
திருமுல்லைவாயில் : திருமுல்லைவாயில், பச்சைமலையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருமுல்லைவாயிலில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் சமேத பச்சைமலையம்மன் கோவில் உள்ளது. 20ம் தேதி, இக்கோவிலில், பந்தகால் நிகழ்ச்சியோடு கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, 5:00 மணியளவில் விநாயகர் வழிபாடு, ஆறாம் கால யாக பூஜை நடந்தது. 9:00 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. கோவிலை வலம் வந்த பின், கோபுர விமானம் மற்றும் மூலஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள், பக்தி கோஷங்களுடன், இரு கரம் கூப்பி வழிபாடு செய்தனர். அமைச்சர் பாண்டியராஜன் உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக, கோவில் முழுவதும், 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.