பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
காரைக்குடி;சாக்கோட்டை பெரியகொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட நென்மேனி சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோயில் கும்பாபிேஷக விழா ஜன.27-ம் தேதி கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. அன்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், கலாகர்சணம், கும்பம் யாகசாலை பிரவேசம், முதல்கால யாக வேள்வி நடந்தது. இரவு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 8:45 மணிக்கு நாடி சந்தானம், 9:00 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை, 9:15 மணிக்கு கடம் புறப்பாடும், 9:30 மணிக்கு மகா கும்பாபிேஷகமும், 9:40 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம், அபிேஷகம் பட்டு சார்த்துதல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை நென்மேனி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.