Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் கும்பாபிேஷகம்: திரளான ... சீர்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன் சீர்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா:விரதமிருந்த பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2018
01:02

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று, பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, குண்டம் திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல், இரவு, 9:00 மணிக்கு சித்தரத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கோவில் அருளாளி, மல்லிகை பூ உருண்டை, எலுமிச்சை உருட்டி, குண்டம் இறங்குவதை துவக்கினார். அருளாளிகளை தொடர்ந்து, முறைதாரர்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை, 10:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, நாளை காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar