பதிவு செய்த நாள்
10
பிப்
2018
12:02
ஆத்தூர்: பெண்கள், வீட்டு வாசல்களில் கோலமிட்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மதுரை, மீனாட்சி அம்மன் கோவில்; திருவள்ளூர், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் ஸ்தல விருட்ஷம் மரம் மற்றும் வேலூரில் அம்மன் கோவில் தேர் தீ விபத்துக்குள்ளானது. அதற்கு பரிகாரமாக, அவரவர் வீட்டு வாசல்களில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபாடு நடத்த வேண்டும் என, ஆன்மிக குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, தை வெள்ளியான நேற்று, ஆத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும், வீட்டு வாசல்களில், பெண்கள் கோலமிட்டு, விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்தனர்.