பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
கல்வி, கலை, ஞானம் போன்றவற்றுக்கு அதிபதியான ஹயக்கிரீவர், திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவராக, தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தன்னம்பிக்கையுடன், தேர்வை சிறப்பாக எழுதி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஆண்டு தோறும் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான சிறப்பு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள், மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது. நாளை, (11ம் தேதி), பிளஸ் 2 மாணவர்களுக்காக, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி; 10:30 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனம்; 11:00 மணிக்கு நாம சங்கீர்த்தனம்; 11:30 மணிக்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை; பகல், 12:00 மணிக்கு, பிரசாத வினியோகம் நடக்கிறது.
யாக வேள்வி, அபிஷேகம், நாம சங்கீர்த்தனத்தோடு, பங்கேற்கும் மாணவ, மாணவியர் பெயர், நட்சத்திரங்களுக்குடன் தனித்தனியே அர்ச்சனை செய்யப்படுகிறது. பங்கேற்கும் மாணவர்களுக்கு, எழுது பொருள் அடங்கிய பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. வரும், 18, 25ம் தேதி களில், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஸ்ரீ ஹயக்கிரீவர் பூஜை நடக்கிறது.இதில், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்களுடன் பங்கேற்கலாம்.