பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
சேலம்: மஹா சிவராத்திரியையொட்டி, சிவாலயங்களில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு மஹா சிவராத்திரி விழா துவங்கியது. அதையொட்டி, இரவு முழுவதும் நான்கு கால பூஜை நடந்தது. ஒவ்வொரு பூஜையின்போது, பால், தயிர், இளநீர் உள்ளிட்டவை மூலம், சிறப்பு அபி ?ஷகம் செய்து, விசேஷ அலங்காரம், சுகவனேஸ்வரருக்கு சாத்துபடி செய்யப்பட்டது. பின், தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது அக்ரஹாரம், காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று காலை, முதல் கால பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, 1,008 சங்காபி ?ஷகம் நடந்தது. மாலை, பஞ்சமுக ருத்ராட்ச கவச அலங்காரம், வெள்ளி நாகாபரண சேவை, முத்தங்கி அலங்காரம் நடந்தது.
*உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், மாலை பிரதோஷ பூஜை, இரவு, சிவ மந்திர ஜபம் செய்து, கலசங்களில் வைத்திருந்த புனிதநீரை, சிவாச்சாரியார் மூலவருக்கு ஊற்றி, அபி?ஷகம் செய்தார். தொடர்ந்து, பால், தயிர், சந்தனம், தேன், நெய், கரும்புச்சாறு, இளநீர் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் அபி ?ஷகம் செய்து, மலர் மாலைகளால் அலங்கரித்து, முதல் கால பூஜை நடந்தது. பின், இரண்டு, மூன்று, நான்காம் கால அபி?ஷக பூஜை நடந்தது. மேலும், இரவு முழுவதும் மாயி வீணா மியூசிக் பள்ளி சிவகாமி கருணாகரன் குழுவினரின் வீணை கச்சேரி நடந்தது.
*பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி கருணாகரேஸ்வரர் ஆலயத்தில், மாலை, மூலவருக்கு அபி?ஷகம், சிறப்பு பூஜை நடந்தது. இரவு, கருணாகரேஸ்வரர், கருணாகரேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி ஆகிய கிராமங்களின் முக்கிய வீதிகள் வழியாக, திருவீதி உலா வந்தனர். இதில், ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். அதேபோல், குகை அம்பலவாணர், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சிசுந்தரேஸ்வரர், மீனாட்சி சொக்கநாதர் என, மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில், மஹா சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இரவு முழுவதும் உணவு அருந்தாமல், கண் விழித்து காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.