Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூர்த்திமலைக்கு திருச்சப்பர ... சிவராத்திரி விழா: ஈரோடு சிவன் கோவில்களில் விடியவிடிய வழிபாடு சிவராத்திரி விழா: ஈரோடு சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை: கண் விழித்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை: கண் விழித்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
01:02

சேலம்: மஹா சிவராத்திரியையொட்டி, சிவாலயங்களில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு மஹா சிவராத்திரி விழா துவங்கியது. அதையொட்டி, இரவு முழுவதும் நான்கு கால பூஜை நடந்தது. ஒவ்வொரு பூஜையின்போது, பால், தயிர், இளநீர் உள்ளிட்டவை மூலம், சிறப்பு அபி ?ஷகம் செய்து, விசேஷ அலங்காரம், சுகவனேஸ்வரருக்கு சாத்துபடி செய்யப்பட்டது. பின், தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாவது அக்ரஹாரம், காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று காலை, முதல் கால பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, 1,008 சங்காபி ?ஷகம் நடந்தது. மாலை, பஞ்சமுக ருத்ராட்ச கவச அலங்காரம், வெள்ளி நாகாபரண சேவை, முத்தங்கி அலங்காரம் நடந்தது.

*உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், மாலை பிரதோஷ பூஜை, இரவு, சிவ மந்திர ஜபம் செய்து, கலசங்களில் வைத்திருந்த புனிதநீரை, சிவாச்சாரியார் மூலவருக்கு ஊற்றி, அபி?ஷகம் செய்தார். தொடர்ந்து, பால், தயிர், சந்தனம், தேன், நெய், கரும்புச்சாறு, இளநீர் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் அபி ?ஷகம் செய்து, மலர் மாலைகளால் அலங்கரித்து, முதல் கால பூஜை நடந்தது. பின், இரண்டு, மூன்று, நான்காம் கால அபி?ஷக பூஜை நடந்தது. மேலும், இரவு முழுவதும் மாயி வீணா மியூசிக் பள்ளி சிவகாமி கருணாகரன் குழுவினரின் வீணை கச்சேரி நடந்தது.

*பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி கருணாகரேஸ்வரர் ஆலயத்தில், மாலை, மூலவருக்கு அபி?ஷகம், சிறப்பு பூஜை நடந்தது. இரவு, கருணாகரேஸ்வரர், கருணாகரேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி ஆகிய கிராமங்களின் முக்கிய வீதிகள் வழியாக, திருவீதி உலா வந்தனர். இதில், ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். அதேபோல், குகை அம்பலவாணர், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சிசுந்தரேஸ்வரர், மீனாட்சி சொக்கநாதர் என, மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களில், மஹா சிவராத்திரியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இரவு முழுவதும் உணவு அருந்தாமல், கண் விழித்து காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar