Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ... ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராட ஆன் லைன் பதிவு ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராட ஆன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகுபலிக்கு மஹாமஸ்தாபிஷேகம்: சிரவணபெளகொலாவில் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2018
10:02

சிரவணபெளகொலா: சமணர்களின் கும்பமேளாவாக கருதப்படும், மஹாமஸ்தாபிஷேகம், கர்நாடக மாநிலம், சிரவணபெளகொலாவில், இன்று கோலாகலமாக துவங்குகிறது.கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், சமணர்களின் புனித யாத்திரை தலமாக, சிரவணபெளகொலா உள்ளது.

Default Image
Next News

88வது முறை: இங்குள்ள விந்தியகிரி மலையில், சமணர்களின் வழிபாட்டுக்குரிய, முதல் தீர்த்தங்கரர், ஆதிநாத்தின் மகன், பாகுபலியின் உருவச் சிலை உள்ளது. இதற்கு, 12 ஆண்டு களுக்கு ஒருமுறை, மஹாமஸ்தாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சி, சமணர்களின் மஹா கும்பாபிஷேகமாக கருதப்படுகிறது.இந்தாண்டு, மஹாமஸ்தாபிஷேகத்துக்கான முதற்கட்ட சடங்கு நிகழ்ச்சிகளை, 7ல், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, இன்று, மஹாமஸ்தாபிஷேகம் துவங்குகிறது. இந்நிகழ்ச்சிகள், 25 வரை நடைபெறும்.நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும், 40 லட்சம் பேர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.விந்தியகிரி மலையில் உள்ள, பாகுபலி சிலையின் உயரம், 57 அடி; ஒரே கல்லால் ஆனது. ஒரே கிரானைட் கல்லால் செய்யப்பட்ட, உலகின் பெரிய சிலை என்ற பெருமை, இதற்கு உண்டு. மஹாமஸ்தாபிஷேகம், முதன்முறையாக, 981ல், கங்கர்களின் ஆட்சியில் செய்யப்பட்டது. தற்போது, 88வது முறையாக, இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரூ.300 கோடிஇதற்காக, 2 கி.மீ., சுற்றளவில், ஆயிரக்கணக்கான, டென்ட் கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மஹாமஸ்தாபிஷேகத்துக்கு, 300 கோடி ரூபாய் செலவிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையத்தில் ஏழுமலையப்பன் வெங்கடேஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நாளை கோலாகலமாக நடக்க உள்ளது. ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar