Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தப்பன் திருவிழாவில் ... சித்தர்மலை பாதை சீரமைக்கப்படுமா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலுக்கு பஸ் நிறுத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2018
01:02

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலுக்கு இரவில் அரசு பஸ் வசதி இல்லாததால், பக்தர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வட, தென் மாநிலத்தில் இருந்து தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் பகல், இரவு முழுவதும் அரசு பஸ், ரயிலில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்குவார்கள். இங்கிருந்து 2.5 கி.மீ.,துாரமுள்ள கோயிலுக்கு செல்ல அரசு டவுன் பஸ் சேவை உள்ளது. இதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூபாய் 6ம், அதே சமயத்தில் ஆட்டோவுக்கு ரூபாய் 60 முதல் 100 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் இரவு 10:00 மணிக்கு பிறகு டவுன் பஸ் போக்குவரத்து இல்லாததால், நள்ளிரவில் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், ஆட்டோவை தேடி செல்லும் அவலம் உள்ளது. சில பக்தர்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் ஒய்வெடுப்பதால் திருடர்கள், சமூக விரோதிகளால் தொல்லை ஏற்பட்டது.

இதனை தவிர்க்க 2010ல் ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கம் முயற்சியால், இரவு 10:00 மணிக்கு பிறகு ராமேஸ்வரம் வரும் அனைத்து வெளியூர் பஸ்களும் கோயில் வரை செல்ல மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனை ஒரு சில ஆண்டுக்கு பின்பற்றிய டிரைவர்கள், நடத்துநர்கள் காலபோக்கில் கண்டு கொள்ளாமல் விட்டனர். இதனால் தற்போது ஒருசில பஸ்கள் தவிர அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விடுகின்றனர். நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் பக்தர்கள் ஆட்டோக்களை தேடி செல்கின்றனர். சிலர் கோயிலுக்கு நடந்தே செல்வதால் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது. எனவே உத்தரவை காற்றில் பறக்க விடும் பஸ் டிரைவர்கள், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுத்து இரவு 10:00 மணிக்கு பிறகு வெளியூர் பஸ்கள் கோயில் வரை செல்ல மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 
temple news
செஞ்சி; கொங்கரப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் ஆடி பெரிய விழா நடந்தது.செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு ... மேலும்
 
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar