* மனைவியிடம் நல்லவராக இருப்பவரே உங்களில் நல்லவர். நான் என் மனைவிமார்களுக்கு நல்லவனாக இருக்கிறேன். * பொருளுக்காக மட்டும் நீங்கள் பேராசை கொண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். * ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை. * குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே, இறைஅருளை அள்ளி தருவதாகும். * நீங்கள் கற்புடையவர்களாக இருந்தால் உங்கள் மனைவியரும் கற்புடையவர்களாக இருப்பர். * பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். ஏனென்றால் அவர்களே உங்களின் தாய், மகள், மாமியாராகவும் இருக்கின்றனர்.