இருதயம், சிறுநீரகம், புற்று நோய் போன்றவற்றால் மரணபயம் ஏற்படுவதுண்டு. இந்நோய் வந்து குணமானவர்கள், மீண்டும் இது தங்களை தாக்குமோ என அச்சப்படுவர். இந்த பயத்தைப் போக்க, திருச்சி – மணச்சநல்லூர் சாலையில் 15 கி.மீ., தூரத்திலுள்ள திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் (சிவன்) கோயிலில் உள்ள பாதாள எமனை வழிபட்டு வரலாம். சிவனுக்கு பயந்து எமன் இங்கு ஒளிந்திருப்பதாக நம்பிக்கை.