பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின், 78வது பிறந்த நாள் விழா, நேற்று முன்தினம் துவங்கி, நாளை வரை நடக்கிறது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலையில், பங்காரு அடிகளாரை, வெள்ளி ரதத்தில் அமர்த்தி, ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். அதன் பின், தனி மேடையில், அடிகளார் அமர்ந்தார். அப்போது, பக்தர்களுக்கு மற்றும் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் பொறுப்பாளர்கள், அடிகளாருக்கு பாத பூஜை செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து, பவுர்ணமி பூஜையில், 1,008 ஓம் சக்தி விளக்குகள் வைத்து, சிறப்பு வேள்வி பூஜைகள் நடந்தன. எம்.ஏ.எஸ்.எம்., அரங்கில், ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி மற்றும் ஆதிபராசக்தி தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, மக்கள் நலப்பணி விழா மற்றும் அடிகளார் பிறந்த நாள் விழா மலர் வெளியிடப்படுகிறது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன் உட்பட முக்கிய பிரமுர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆதிபராசக்தி சக்தி பீடங்கள், வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.