மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2018 12:03
மதுரை: மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் மார்ச் 30 பங்குனி உத்திர பெருவிழா நடக்கிறது. அன்று காலை 10:00 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் இருந்து 108 பால்குடம் புறப்பட்டு மதியம் 12:00 மணிக்கு முருகன், வள்ளி மற்றும் தேவசேனாவுக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. பின், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடக்கிறது.