Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி ... பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா கோலாகலம் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகரம்
எழுத்தின் அளவு:
ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகரம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2018
02:04

ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம், இன்று காலை நடக்கிறது. ஈரோடு மாநகரில் பிரப் ரோட்டில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மகப்பேறு வேண்டுவோர், 45 வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வந்து வணங்கி, மகப்பேறு அடைகின்றனர். நோய் வந்தோருக்கு விரைவில் சுகம் கிடைக்கிறது. இக்கோவிலுடன் இணைந்த சின்ன மாரியம்மன் கோவில், பெரியார் வீதியில் உள்ளது. இந்த இரு கோவில்களுக்கும் இடையே வாய்க்கால் மாரியம்மன் கோவில் உள்ளதால், இதை நடுமாரியம்மன் என்று அழைப்பர். இக்கோவில்களில் தற்போது, பங்குனி குண்டம் திருவிழா நடந்து வருகிறது. மூன்று கோவில்களையும் இணைத்து நடப்பதால், ஊரே விழாக்கோலம் பூணும். காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில், நேற்று தீ மிதி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர். இன்று காலை, 9:30 மணிக்கு பொங்கல் வைபவம், சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் வடம் பிடித்தல், மீண்டும் மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து இழுப்பார்கள். நாளை, மாலை, 4:00 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்தலும், இரவு, 9:30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும், 6ல் மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்து சின்ன மாரியம்மன் கோவில் நிலை சேர்கிறது. அன்றிரவு, சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்குகளில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் ரமணிகாந்தன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, கோர்ட் உத்தரவை பின்பற்றி, கோவிலை இடிக்கச் சென்ற அதிகாரிகளுடன், பொதுமக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar