Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி ... பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா கோலாகலம் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகரம்
எழுத்தின் அளவு:
ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: விழாக்கோலம் பூண்ட மஞ்சள் மாநகரம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2018
02:04

ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம், இன்று காலை நடக்கிறது. ஈரோடு மாநகரில் பிரப் ரோட்டில், பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. மகப்பேறு வேண்டுவோர், 45 வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வந்து வணங்கி, மகப்பேறு அடைகின்றனர். நோய் வந்தோருக்கு விரைவில் சுகம் கிடைக்கிறது. இக்கோவிலுடன் இணைந்த சின்ன மாரியம்மன் கோவில், பெரியார் வீதியில் உள்ளது. இந்த இரு கோவில்களுக்கும் இடையே வாய்க்கால் மாரியம்மன் கோவில் உள்ளதால், இதை நடுமாரியம்மன் என்று அழைப்பர். இக்கோவில்களில் தற்போது, பங்குனி குண்டம் திருவிழா நடந்து வருகிறது. மூன்று கோவில்களையும் இணைத்து நடப்பதால், ஊரே விழாக்கோலம் பூணும். காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில், நேற்று தீ மிதி விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கினர். இன்று காலை, 9:30 மணிக்கு பொங்கல் வைபவம், சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் வடம் பிடித்தல், மீண்டும் மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து இழுப்பார்கள். நாளை, மாலை, 4:00 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்தலும், இரவு, 9:30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதியுலாவும், 6ல் மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்து சின்ன மாரியம்மன் கோவில் நிலை சேர்கிறது. அன்றிரவு, சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்குகளில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் ரமணிகாந்தன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar