பதிவு செய்த நாள்
17
ஏப்
2018
01:04
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில், பயிர் சாகுபடி சிறப்பாக அமைய வேண்டி, நேற்று பூமி பூஜை செய்து, நல்லேறு கட்டும் விழா நடத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினம் மற்றும் சித்திரை மாத சதுர்த்தி திதியில், நல்லேறு பூட்டி, பூமா தேவியையும், சூரிய நாராயணனையும் விவசாயிகள் வழிபடுவர். நல்ல மழையும், விளைச்சலும் வேண்டி, ஆண்டுதோறும் காவிரியில் தண்ணீர் வருவதற்கு முன், நல்லேறு கட்டி வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டு, தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, தஞ்சாவூர் சுற்றுப்பகுதி கிராமங்களில், விவசாயத்துக்கு பயன்படுத்தும் கருவிகளை வைத்து வழிபாடு நடத்தினர். பின், நிலத்தை உழவு செய்து, நெல் போன்ற தானியங்களை விதைத்தனர்.