மீனாட்சி அம்மன் கோயிலில் அலைபேசி பயன்படுத்த அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2018 01:04
மதுரை, தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்க பொதுச் செயலாளர் காசிலிங்கம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது சித்திரைத் திருவிழா துவங்கியுள்ளது. இதையொட்டி செய்திகளை நேரலை ஒளிபரப்பு செய்ய, ஏப்., 30 வரை நிருபர்கள், கேமராமேன்கள், பத்திரிகையாளர்கள் அலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு: விழாவை நேரலை ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்கள், தனித்தனியே மதுரை போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்க வேண்டும். அவர், ஒரு சேனலுக்கு தலா 2 பேருக்கு அனுமதியளிக்க வேண்டும். அதனடிப்படையில் கோயில் இணை கமிஷனர் தனித்தனி பாஸ் வழங்க வேண்டும். அதில் ’நேரலை ஒளிபரப்பிற்கு மட்டும்’ என குறிப்பிட வேண்டும். பாஸ் இன்றி அலைபேசி வைத்திருந்தால், பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.